search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பூரில் குட்கா விற்பனை செய்த வடமாநில வியாபாரிகள் 3 பேர் கைது - 53 கிலோ பறிமுதல்

    திருப்பூரில் குட்கா விற்பனை செய்த வடமாநில வியாபார்கள் 3 பேரை கைது செய்த போலீசார் 53 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் கஞ்சா, லாட்டரி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பனை தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை போலீசார் திருமுருகன்பூண்டி, பாண்டியன் நகர், மணிய காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 53 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா) பறிமுதல் செய்தனர்.அதேபோல் பாண்டியன் நகர் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் ஒரு வாகனம் நின்று கொண்டு இருந்தது. சந்தேகப்பட்ட போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அங்கு புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்ததாக ஓம் பிரகாஷ், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் தல்சாராம்,வீணாராம் ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர்.
    Next Story
    ×