search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலையம்
    X
    கோவை விமான நிலையம்

    கோவை விமான நிலையத்தில் இளம்பெண் மாயம்

    கோவை விமான நிலையத்தில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சலீம். இவரது மகள் சோபியா (வயது 23). இவரது கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகள் சோபியாவை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதற்காக கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

    விமான நிலையத்தில் நின்று கொண்டு இருந்த சோபியா திடீரென மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சலீம் தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. 

    பின்னர் இது குறித்து சலீம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விமான நிலையத்தில்  மாயமான சோபியாவை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×