என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் மர்ம மரணம்
Byமாலை மலர்14 Dec 2019 4:28 PM GMT (Updated: 14 Dec 2019 4:28 PM GMT)
பாலக்கோடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கோணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (வயது 20). இவர்களுக்கு கனிஷ்கா ஸ்ரீ என்ற ஒரு வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில் முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் வினிதா கோபித்துக்கொண்டு பாலக்கோடு அடுத்துள்ள மாரவாடி பகுதியில் உள்ள அவரது தாயார் சுமதி வீட்டிற்கு சென்று விடுவார். பின்னர் சுமதி வினிதாவை சமாதானம் செய்து வைத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முருகன் மற்றும் வினிதாவிற்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வினிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வினிதாவின் தாய் சுமதி மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார். இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X