search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும்- சீமான்

    உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு சீமான் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.

    அதன் அடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும். வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×