search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் ஜோடி தஞ்சம்
    X
    காதல் ஜோடி தஞ்சம்

    குளச்சல் அருகே இளம்பெண் மினி பஸ் கண்டக்டருடன் போலீசில் தஞ்சம்

    குளச்சல் அருகே திருமணம் நிச்சயதார்த்த வேலைகள் நடந்து வந்த நிலையில் இளம்பெண் மினி பஸ் கண்டக்டருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் சேவியர் தொபியாஸ். இவரது மகள் எடல் அனிசா (வயது23). இவர் பிளஸ் 2 படித்துள்ளார். குளச்சலில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எடல் அனிசாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயதார்த்த வேலைகள் நடந்து வந்தது.

    இந்த நிலையில் எடல் அனிசா நேற்று முன்தினம் வீட்டில் இருந்து துணிக்கடைக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் எடல் அனிசா வேலை பார்த்த கடைக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது எடல் அனிசா, நேற்று வேலைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான எடல் அனிசாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு எடல் அனிசா உடையார்விளையை சேர்ந்த ஜெயக்குமார் (26) என்ற வாலிபருடன் குளச்சல் போலீசில் தஞ்சம் அடைந்தார். ஜெயக்குமார் மினி பஸ் கண்டக்டராக இருப்பதாகவும், இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும் ஜெயக்குமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தை பதிவு செய்ய இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையம் வரவழைத்தனர்.

    எடல் அனிசாவின் பெற்றோர் மகளை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல மறுத்து விட்டார். இதையடுத்து போலீசார் அவரை காதலனுடன் அனுப்பி வைத்தனர். இதனால் எடல் அனிசாவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் இருந்து கண்ணீருடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    Next Story
    ×