search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    ஆலங்குளம் அருகே மின் மோட்டாரை இயக்கிய வாலிபர் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள குறிப்பான் குளத்தை சேர்ந்தவர் அருண் (வயது 31), விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில் மின் மோட்டார் வைத்து பயன்படுத்தி வந்தார். 

    இந்நிலையில் இன்று வீட்டில் பின்புறம் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் அருண் அதே இடத்தில் அசையாமல் நின்றுள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவர் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் கம்பை வைத்து தட்டினர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

    ஆலங்குளம் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக டாக்டர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×