search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண் பிணம்
    X
    ஆண் பிணம்

    தேனி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

    தேனி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வீரபாண்டியை அடுத்த பழனிசெட்டிபட்டி அணை கருப்பசாமி கோவில் அருகே பெரியாற்றின் கரையோரம் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் புளு கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் யார்? எப்படி இறந்தார்? ஆற்று வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விரித்து வருகின்றனர். இது தொடர்பாக வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×