என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் கொள்ளை
Byமாலை மலர்13 Dec 2019 10:26 AM GMT (Updated: 13 Dec 2019 10:26 AM GMT)
திருமங்கலம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், கூடக்கோவில் அருகே உள்ள கல்லணை புதூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சம்பவத்தன்று தனது நகைகளை அடகு வைக்க திருமங்கலம் வந்தார்.
அங்குள்ள கடையில் அடகு வைத்த பின்னர் ரூ.60 ஆயிரத்தை தனது கைப்பையில் வைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக திருமங்கலம் பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது பஸ்சில் ஏறுவதற்காக கூட்டம் முண்டியடித்தது. இதில் ராஜேஸ்வரியும் சிக்கிக் கொண்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் ராஜேஸ்வரி கைப்பையில் இருந்த ரூ.60 ஆயிரத்தை நைசாக திருடிக் கொண்டு தப்பினார்.
பஸ் ஏறிய பின் பையில் இருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு ராஜேஸ்வரி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X