என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி புதுக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 Dec 2019 9:32 AM GMT (Updated: 13 Dec 2019 9:32 AM GMT)
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து சமீபத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாகாண பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். சிறுபான்மையினர் உரிமையை பறிக்கும் இந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.
நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் திடீர் போராட்டத்தால் இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வராத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து சமீபத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்த இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாகாண பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.
இதையடுத்து சென்னையிலும் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 250 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். சிறுபான்மையினர் உரிமையை பறிக்கும் இந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.
நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டு இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் திடீர் போராட்டத்தால் இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வராத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X