என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லாரி நிற்பதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த லாரியில் சோதனை செய்தனர்.
அதில் 126 மூட்டைகளில் 6 டன் ரேஷன் அரிசி இருப்பதும், அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஜி.ஆர். கண்டிகை கிராமத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் கோவிந்தசாமி, பஷா, அன்சாரி, முகமது சித்திக் மற்றும் கவரைப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும், ரேசன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியையும் கவரைப்பேட்டை போலீசார் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்