search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 6 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 6 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மினி லாரி நிற்பதாக கவரைப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த லாரியில் சோதனை செய்தனர்.

    அதில் 126 மூட்டைகளில் 6 டன் ரே‌ஷன் அரிசி இருப்பதும், அதனை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக ஜி.ஆர். கண்டிகை கிராமத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர் கோவிந்தசாமி, பஷா, அன்சாரி, முகமது சித்திக் மற்றும் கவரைப்பேட்டையை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரையும், ரேசன் அரிசி மூட்டைகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியையும் கவரைப்பேட்டை போலீசார் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×