என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை- பாட்டி, இடைத்தரகர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்13 Dec 2019 5:24 AM GMT (Updated: 13 Dec 2019 5:24 AM GMT)
குடவாசல் அருகே சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவரது பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த மாதம் இடைத்தரகர்கள் மூலம் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி விசாரித்தபோது, சிறுமிகளின் பாட்டி அந்த சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் என கருதப்படும் இரண்டு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்திற்காக விற்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிறுமிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் போலீசார் ஈரோடு சென்றுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X