search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம் குடித்து தற்கொலை
    X
    விஷம் குடித்து தற்கொலை

    செங்கோட்டை அருகே டிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி தற்கொலை

    செங்கோட்டை அருகே டிராக்டர் கடனை கட்ட முடியாத விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த நெடுவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவர் வங்கி கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். போதுமான விவசாய வேலைகள் நடைபெறாததால் இவரால் கடனை அடைக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்து மதுகுடிக்க தொடங்கினார். 

    இதையறிந்த அவரது தாயார் சித்ரா, முத்துக்குமாரை திட்டினார். இதில் மனமுடைந்த முத்துக்குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×