search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

    தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தருமுபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு கதிர்நாயக்கன அள்ளி பகுதியில் கஞ்சாவிற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கிருஷ்ணா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வேடியப்பன் (வயது 69) என்பவர் கையும் களவுமாக போலீசிடம் பிடிபட்டார். 

    இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடியப்பனை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேப்போன்று பென்னாகரம் போலீசார் முதுகம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (40) என்பவரை கஞ்சா விற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    மேலும் பாலக்கோடு போலீசாரால் ராஜாராம் (23) என்பவர் கஞ்சா விற்றதன் பேரில் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×