என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே 3 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்
Byமாலை மலர்12 Dec 2019 4:25 PM GMT (Updated: 12 Dec 2019 4:25 PM GMT)
ராயக்கோட்டை அருகே 3 குழந்தைகளின் தாய் திடீரென மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஅள்ளியை அடுத்த பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி லட்சுமி (வயது29). இவர்களுக்கு மதுமிதா, லலிதா என்ற 2 மகள்களும், மோகன் என்ற மகனும் உள்ளனர். லட்சுமி நேற்று காலை தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். மாலை 3 மணியளவில் லட்சுமியை அவரது கணவர் கோபால் செல்போனில் தொடர்பு கொண்டபோது ராயக்கோட்டை அருகே பஸ்சில் வருவதாக தெரிவித்தார். ஆனால் அவர் நீண்டநேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லை.
கோபால் மீண்டும் அவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது லட்சுமியின் செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது. இதனால் பதறிப்போன கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் தேடியும் கிடைக்காததால் அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து கோபால் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X