search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள வேலாம்பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் மகன் உத்திரியதீபன்ராஜ் (வயது19). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தீபன்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் அருகே உள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (28). கூலித்தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வராஜ் அரளி விதையை அரைத்து குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×