search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    மதுரையில் அரசு பஸ் மோதி பிளஸ்-2 மாணவர் பலி

    மதுரையில் அரசு பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலியானார்.விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கே.புதூர் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுதர்சன் (வயது 17) . 3 மாவடி சந்தானம் நகரைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகன் சிவசங்கரன் (17). இவர்கள் இருவரும் பிளஸ்-2 மாணவர்கள்.

    நேற்று சுதர்சனும், சிவசங்கரனும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். புது ஜெயில்ரோடு பாலத்தில் சென்றபோது அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் 2 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவசங்கரன் காயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×