என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் செலவுக்கு ரூ.50 பணம் தராததால் சிறுவன் தற்கொலை
Byமாலை மலர்12 Dec 2019 11:24 AM GMT (Updated: 12 Dec 2019 11:24 AM GMT)
பல்லடத்தில் செலவுக்கு ரூ.50 பணம் தராததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம்:
பீகார் மாநிலம் பேசால் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சகானி (வயது 52). இவரது மனைவி பபிதாதேவி (45).இவர்களது மகன் ரோஷன்குமார் (12).
இந்நிலையில் ஆனந்த் சகானி குடும்பத்துடன் பல்லடம் கரைப்புதூர் நொச்சிபாளையத்தில் தங்கி பனியன் கம்பெனிக்கு சென்று வந்தார்.ரோஷன்குமார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று செலவுக்கு 50 ரூபாய் வேண்டும் என்று தந்தையிடம் ரோஷன்குமார் கேட்டார். பணம் தரமறுத்த தந்தை பின்னர் மனைவியிடம் மகனுக்கு புத்திமதி கூறி அவன் கேட்ட பணத்தை கொடு என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றார்.
பணம் கிடைக்காத கோபத்தில் ரோஷன்குமார் அறைக்குள் சென்றுகதவை சாத்திக் கொண்டார். மகனை சமாதானம் செய்ய தாய் பபிதாதேவி அவரை அழைத்தார். ஆனால் ரோஷன்குமார் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பபிதாதேவி இது குறித்து கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
ஆனந்த் சகானி விரைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரோஷன்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்தக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீகார் மாநிலம் பேசால் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் சகானி (வயது 52). இவரது மனைவி பபிதாதேவி (45).இவர்களது மகன் ரோஷன்குமார் (12).
இந்நிலையில் ஆனந்த் சகானி குடும்பத்துடன் பல்லடம் கரைப்புதூர் நொச்சிபாளையத்தில் தங்கி பனியன் கம்பெனிக்கு சென்று வந்தார்.ரோஷன்குமார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று செலவுக்கு 50 ரூபாய் வேண்டும் என்று தந்தையிடம் ரோஷன்குமார் கேட்டார். பணம் தரமறுத்த தந்தை பின்னர் மனைவியிடம் மகனுக்கு புத்திமதி கூறி அவன் கேட்ட பணத்தை கொடு என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றார்.
பணம் கிடைக்காத கோபத்தில் ரோஷன்குமார் அறைக்குள் சென்றுகதவை சாத்திக் கொண்டார். மகனை சமாதானம் செய்ய தாய் பபிதாதேவி அவரை அழைத்தார். ஆனால் ரோஷன்குமார் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த பபிதாதேவி இது குறித்து கணவருக்கு போனில் தகவல் தெரிவித்தார்.
ஆனந்த் சகானி விரைந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரோஷன்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்தக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X