search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல்
    X
    மறியல்

    ராணிப்பேட்டை குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

    ராணிப்பேட்டையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை 2-வது வார்டை சேர்ந்த தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியம் நேரு நகர் முஸ்லீம் தெரு ஆகிய பகுதிகளில் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    இது சம்பந்தமாக ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளரிடம் பல முறை புகார் தெரிவித்தனர். நகராட்சி சார்பில் பைப், லைன் உடைந்து உள்ளதால் குடிநீர் சரிவர வழங்க முடியவில்லை என தெரிவித்து சரி செய்து தரப்படும் கூறினர்.

    இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் எல்.எப் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Next Story
    ×