என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே நிலப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்க முயன்றவர் கைது
Byமாலை மலர்11 Dec 2019 2:48 PM GMT (Updated: 11 Dec 2019 2:48 PM GMT)
நிலப்பிரச்சனை காரணமாக பெண்ணை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை சப்-ஜெயிலில் அடைத்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜமுக்குடபட்டி பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 50) விவசாயி. கொல்லகெட்டாய் பகுதியை சேர்ந்த மணி (எ) லிங்கம் (60) விவசாயி. இவர்கள் இருவருக்கும் 1 ஏக்கர் 47 சென்ட் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் மாதம்மாலுக்கே சொந்தமாகும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை அடுத்து மாதம்மாள் தனது நிலத்தில் வாழை மரங்கள் பயிர் செய்திருந்தார். நேற்று மாதம்மாள் நிலத்தில் இருந்த வாழை மரங்களை முன்விரோதம் காரணமாக மணி வெட்டி சாய்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்க முயன்ற மாதம்மாளையும் அவர் தாக்க முயன்றுள்ளார். பின்னர், அவரிடம் இருந்து தப்பித்துவந்த அவர் போச்சம்பள்ளி போலீஸ்சில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து மணி என்கின்ற சிவலிங்கத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊத்தங்கரை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X