search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கபிஸ்தலம் அருகே மெக்கானிக்கை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது

    கபிஸ்தலம் அருகே மெக்கானிக்கை மிரட்டி பணத்தை பறித்த தஞ்சை வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே நாணல்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 26). இவர் கபிஸ்தலம் பாலக்கரையில் இரண்டு சக்கர மோட்டார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றபோது கபிஸ்தலம் அருகே தென்சருக்கை கிராமத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த 2 பேர் அவரை வழிமறித்து உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று கத்தியை காட்டி மிரட்டினர். 

    பின்னர் பால்ராஜிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.500 ரொக்க பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து பால்ராஜ் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் , முத்துக்குமார், தலைமை காவலர் சம்பத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    அதில் பால்ராஜிடம் வழிப்பறி செய்தது தஞ்சை பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அருண்குமார் (22) , அம்மன் பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த பவித்திரன் (22) என்பதும் தெரியவந்தது . இதையடுத்து அருண்குமார், பவித்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன், பணம் கைப்பற்றப்பட்டது.
    Next Story
    ×