என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே மெக்கானிக்கை மிரட்டி பணம் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்11 Dec 2019 2:13 PM GMT (Updated: 11 Dec 2019 2:13 PM GMT)
கபிஸ்தலம் அருகே மெக்கானிக்கை மிரட்டி பணத்தை பறித்த தஞ்சை வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே நாணல்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 26). இவர் கபிஸ்தலம் பாலக்கரையில் இரண்டு சக்கர மோட்டார் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றபோது கபிஸ்தலம் அருகே தென்சருக்கை கிராமத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த 2 பேர் அவரை வழிமறித்து உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று கத்தியை காட்டி மிரட்டினர்.
பின்னர் பால்ராஜிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.500 ரொக்க பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பால்ராஜ் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் , முத்துக்குமார், தலைமை காவலர் சம்பத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் பால்ராஜிடம் வழிப்பறி செய்தது தஞ்சை பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அருண்குமார் (22) , அம்மன் பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த பவித்திரன் (22) என்பதும் தெரியவந்தது . இதையடுத்து அருண்குமார், பவித்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன், பணம் கைப்பற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X