search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் பலி

    பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பாலக்கோடு:

    பாலக்கோட்டில் இருந்து தருமபுரி செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் சோமனஹள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சேலம் வசையூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமான உயிரிழந்தார். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோமனஹள்ளி நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதி வலைவு பகுதி என்பதால் முன்னே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இப்பகுதி மேட்டு பகுதியில் இருந்து மிகவும் தாழ்வான பகுதியை நேக்கி வாகனங்களை அதிக வேகத்தில் இயக்குவதாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.  

    எனவே, இப்பகுதியில் வாகனம் வருவது தெரியும் வகையில், புதிய தொழில்நுட்பத்தில் குவி கண்ணாடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×