search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனித்தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
    X
    தனித்தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    மார்ச்-2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக் கிழமை) வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்;.

    மேலும், இந்த தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×