search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்
    X
    ஜெகன்

    பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர் ஜெயிலில் அடைப்பு

    வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலிகட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கபட்டார்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 27). ஆடிட்டர் ஒருவரிடம் வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அதே பஸ்சில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் பஸ்சின் சீட்டில் அமர்ந்திருந்தார்.

    அப்போது ஜெகன் அந்த பெண்ணிடம் நான் கடந்த 5 ஆண்டுகளாக உன்னை காதலிப்பதாக கூறி வந்தேன் நீ ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறாய். ஆனால் நீ வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயம் செய்து கொண்டு இருக்கிறாய் உன்னை விடமாட்டேன் என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த தாலியை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் கட்ட முயற்சித்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அவரை வாணியம்பாடி பஸ் நிலையத்தில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ஜெகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×