search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணை
    X
    வைகை அணை

    வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

    மழை நின்றதால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. தொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 69 அடி வரை உயர்ந்தது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மூல வைகை ஆற்று பகுதியிலும் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து 1818 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 68.44 அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பாசனத்துக்கு 600 கன அடி. 58-ம் கால்வாய்க்கு 150 கன அடி, மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி என மொத்தம் 810 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.95 அடியாக உள்ளது. 769 கன அடி நீர் வருகிற நிலையில் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வருகிற 90 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை. குளிரின் தாக்கம் அதிகரித்து வருவதால் மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

    Next Story
    ×