என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ தி.மு.க.வில் சேருகிறார்
Byமாலை மலர்11 Dec 2019 8:01 AM GMT (Updated: 11 Dec 2019 8:01 AM GMT)
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனது ராஜினாமா முடிவை இன்று மாலையில் அறிவிக்க உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது உண்மைதான் என்றார்.
காங்கிரசில் இருந்து விலகும் மனோகர் தி.மு.க. வில் சேரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி மனோகர் எதுவும் கூறவில்லை.
ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்தபோது அவரது நெருங்கிய ஆதரவாளராக விளங்கினார். ஆனாலும் வாசன் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா. தொடங்கிய போதும் அவருடன் செல்லவில்லை. அந்த அளவு காங்கிரசில் ஈடுபாட்டுடன் இருந்தார்.
ஒருமுறை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தார். எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல்களில் மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் கட்சி செயல்பாடுகளை குறைக்கவில்லை. நேற்று முன்தினம் சோனியா பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்.
இவரது ஒத்துழைப்பில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இந்தியாவிலேயே உயரமாக 150 அடி உயர காங்கிரஸ் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அது திறப்பு விழா காணவில்லை.
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலில் மனோ புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையை பொறுத்தவரை காங்கிரசின் முக்கிய பிரமுகராக திகழும் மனோகர் விலகுவது கட்சிக்கு பலவீனத்தையே ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனது ராஜினாமா முடிவை இன்று மாலையில் அறிவிக்க உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது உண்மைதான் என்றார்.
காங்கிரசில் இருந்து விலகும் மனோகர் தி.மு.க. வில் சேரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி மனோகர் எதுவும் கூறவில்லை.
ராயபுரம் மனோ வடசென்னையில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய நிர்வாகியாக இருந்தவர் 13 ஆண்டுகள் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார்.
ஒருமுறை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தார். எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல்களில் மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும் கட்சி செயல்பாடுகளை குறைக்கவில்லை. நேற்று முன்தினம் சோனியா பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்.
இவரது ஒத்துழைப்பில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இந்தியாவிலேயே உயரமாக 150 அடி உயர காங்கிரஸ் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அது திறப்பு விழா காணவில்லை.
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலில் மனோ புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையை பொறுத்தவரை காங்கிரசின் முக்கிய பிரமுகராக திகழும் மனோகர் விலகுவது கட்சிக்கு பலவீனத்தையே ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X