search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது
    X
    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 395 கனஅடி தண்ணீர் திறப்பு

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 395 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த சில நாட்களாக ஆந்திர விவசாயிகள் நெல் சாகுபடிக்காக கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீரை எடுத்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

    இதனை கருத்தில்கொண்டு பூண்டி ஏரியில் இருந்து கடந்த 29-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் எடுப்பதை அடியோடு நிறுத்திவிட்டதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகமாகி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 744 கனஅடியும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 650 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று மாலை மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 395 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியின் நீர்மட்டம் 29. 35 அடியாக உள்ளது. 1593 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 400 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது.

    புழல் ஏரியில் தற்போது 2054 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 330 மி.கனஅடி உள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு புழல் ஏரியில் நீர் இருப்பு 2 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×