search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பு
    X
    செல்போன் பறிப்பு

    கோயம்பேட்டில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு

    கோயம்பேட்டில் சாலையோரம் நின்ற வாலிபரிடம் பைக்கில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர் (27). இவர் ‘டிப்ளமோ பார்மசி’ படித்துள்ளார். வடபழனியில் உள்ள “பார்மசி கவுன்சிலில்” பதிவு செய்வதற்காக இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை வந்தார். பின்னர் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டு செல்போனில் தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுந்தரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    Next Story
    ×