search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்- பிரசாந்த் கிஷோர்.
    X
    மு.க.ஸ்டாலின்- பிரசாந்த் கிஷோர்.

    மு.க.ஸ்டாலினுடன் அரசியல் ஆலோசகர் கிஷோர் சந்திப்பு- உள்ளாட்சி தேர்தலில் புது வியூகம்

    பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வுக்காக பணிபுரிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    • 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியை கைப்பற்ற அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் வியூகம் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். 
    • கமல் கட்சிக்காக பணிபுரிந்த கிஷோர் திடீரென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய அளவில் தேர்தல்களுக்கு வியூகம் அமைத்து தருவதில் பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர்.

    இவர் தலைமையிலான ‘ஐ பேக்’ என்ற நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு முக்கிய காரணமே பிரசாந்த் கிஷோரின் திட்டங்களும் வியூகங்களும் தான் என்பது பின்னர் தெரிய வந்தது. அடுத்து பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியில் அமைவதற்கும் காரணமாக இருந்தார்.

    பிரசாந்த் கிஷோரின் திட்டங்களால் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். தமிழகத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோரை தமிழக அரசியல் கட்சிகள் அணுகியதாக தகவல்கள் வந்தன.

    கமல்ஹாசனும் பிரசாந்த் கிஷோரை அணுகினார். அவர் மற்ற கட்சிகளை புறக்கணித்துவிட்டு கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார்.

    தனது நிறுவனத்துக்காக 150-க்கு மேற்பட்ட இளைஞர்களை பணிக்கு எடுத்து அவர்கள் மூலமாக இதற்கான பணிகளை தொடங்கினார். கிஷோரின் ஆலோசனைப்படி கட்சியில் பல மாற்றங்கள் நடந்தன.

    கமல் கட்சிக்காக பணிபுரிந்தாலும் பிரசாந்த் கிஷோர் தமிழ்நாட்டின் பிற கட்சிகளுடனும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகின. அ.தி.மு.க, ரஜினி என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின.

    ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகின.

    தி.மு.க.வுக்கு இதுவரை ஆலோசகராக பணியாற்றி வந்தவர் சுனில். அவர் தலைமையிலான குழு நமக்கு நாமே பிரசார பயணம் தொடங்கி, தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார யுக்தி மற்றும் ஸ்டாலினை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 38 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு அவரது பங்கும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு பிறகு சுனில் மீதான நம்பிக்கை குறைந்து போனதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சொல்லி கொள்ளும் அளவுக்கு ஆறுதல் வெற்றியை கூட பெற முடியவில்லை.

    இப்படியே போனால் எதிர்வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க., ரஜினி, கமல் வியூகத்தில் தோல்வியை தழுவ நேரிடும் என்ற அச்சம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்று கட்சியினர் கூறுகின்றனர். இதனை நன்றாக புரிந்து கொண்டதால் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலினே சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் நலன் கருதி சர்வாதிகாரியாக சில முடிவுகளை எடுப்பேன் என அதிரடியாக பேசினார்.

    அதன் தொடர்ச்சியாகவே தி.மு.க.வில் நீண்ட நாட்களாக ஆலோசகராக வழி நடத்தி வந்த சுனில் சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டுள்ளார்.

    தி.மு.க.வை அடுத்து வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் பொதுதேர்தலில் வெற்றி பெற வைக்க மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காக சரியான வியூகங்களை வகுக்க அரசியல் திட்டமிடுதலில் கொடி கட்டி பறக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் உதவியை அணுகியுள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு நடந்துள்ளது. இதில் தி.மு.க.வுக்காக பணிபுரிய பிரசாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இவரது ஆலோசனையின் பேரிலேயே உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. திட்டம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

    பிரசாந்த் கிஷோர் 90 நாட்களுக்குள் தி.மு.க.வுக்கான முதல்கட்ட வேலைகளை முடிப்பது என்ற நோக்கத்துடன் பணிகளை தொடங்கி இருக்கிறார்.

    தி.மு.க.வுக்கு மக்களிடம் என்ன செல்வாக்கு இருக்கிறது? எந்தெந்த பகுதிகளில் செல்வாக்காக இருக்கிறது, எங்கே பலவீனமாக இருக்கிறது, கட்சியின் செல்வாக்கை முடிவு செய்யும் தனிப்பட்ட நபர்கள் யார், கட்சியின் செல்வாக்கை காலி பண்ணும் தனிப்பட்ட நபர்கள் யார், யாரை சேர்த்தால் கட்சி வளரும், யாரை ஒதுக்கிவைத்தால் கட்சி ஜெயிக்கும் என்பன போன்ற பல்வேறு நிலவரத்தை தனது ஆய்வாளர்கள் மூலம் அறிந்துகொள்கிறார். அதன்படியே களத்துக்கு ஏற்ப உத்திகளை வகுக்கிறார்.
    Next Story
    ×