search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    இண்டூர் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின் திருட்டு

    இண்டூர் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே நாகர்கூடலை அடுத்துள்ள தேபினமருதஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் கழுத்தில் அணிந்த 1 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர். இதனை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து ஊர் பொதுமக்கள் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள கவுரி செட்டிப்பட்டியை சேர்ந்த கோபி (வயது26) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×