என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சங்கரன்கோவில் அருகே பள்ளி வேனை மறித்து தகராறு செய்த 2 பேர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம் வந்தநல்லூர் கீழவயலி கிராமத்தில் இருந்து மாணவ- மாணவிகள் ஒரு வேனில் தினமும் முறம்பு பகுதிக்கு சென்று படித்து வந்தனர். இந்த வேன் தினமும் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சென்னிகுளம் வழியாகவே பள்ளிக்கு சென்று வருகிறது.
நேற்றும் வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து கொண்டு சென்னிகுளம் பகுதியில் சென்ற போது அந்த ஊரை சேர்ந்த 3 வாலிபர்கள் வேனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அந்த ஊரை சேர்ந்தவர்கள் அதனை கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து கேள்விபட்ட கீழ வயலியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் சாய்ராம் குமார் (20) வேனை எப்படி வழி மறிக்கலாம் என்று 3 பேரிடமும் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களும் சாய்ராம் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சாய்ராம் குமார் கரிவலம் வந்தநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சென்னி குளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன், ராமசாமி மகன் அருணாகரன், சுப்பையா மகன் கருத்தப் பாண்டி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் மணிகண்டன் மற்றும் கருத்தப்பாண்டியை போலீசார் இன்று கைது செய்தனர். அருணாகரன் தலைமறைவாக உள்ளார். 3 பேரும் டிப்ளமோ பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்