search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மி‌ஷம் செய்த மெக்கானிக் கைது

    கொடைரோடு ரெயில் நிலையத்தில் பேராசிரியையிடம் சில்மி‌ஷம் செய்த மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
    கொடைரோடு:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் இந்திராநகரை சேர்ந்தவர் டாக்டர் சித்ரா (வயது57). இவர் இணை பேராசிரயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

    கொடைரோடு ரெயில் நிலையத்தில் இரவு 2.30 மணி அளவில் ஏ.சி. கோச் அறையில் இவர் இருந்தபோது உள்ளே நுழைந்த ஒரு வாலிபர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் சத்தம்போடவே அங்கிருந்து அவர் ஓடிவிட்டார். இதனையடுத்து சித்ரா மதுரை ரெயில் நிலையத்தில் இறங்கி புகார் அளித்தார்.

    ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் ரெயில்வேயில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரியும் வடமதுரை அருகில் உள்ள முள்ளம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (34) என்பவர்தான் சில்மி‌ஷம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொடைரோடு ரெயில்வே போலீசார் சரவணக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×