என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அய்யம்பேட்டை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
அய்யம்பேட்டை:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே தென் சருக்கை வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜீவா (வயது 38).
இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரு மொபெட்டில் திருவையாறு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மொபட்டை மாதவன் ஒட்டி வந்தார். ஜீவா பின்னால் உட்கார்ந்திருந்தார்.மொபெட் திருவையாறு - கும்பகோணம் சாலையில் இலுப்பக்கோரை சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு திருப்பத்தில் திரும்பியபோது பின்னால் உட்கார்ந்திருந்த ஜீவா நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், சப்இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்