search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய போலீஸ்காரர் ‘சஸ்பெண்டு’

    நெல்லை மாவட்டம் கடையத்தில் பெண்ணை கத்தியால் குத்திய போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 39). இவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கடையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார்.

    அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முப்பிடாதி சக்தி (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. முப்பிடாதி சக்திக்கு திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் அவரை விட்டு தனியாக சென்றுவிட்டார். இதனால் தட்சிணாமூர்த்தியும், முப்பிடாதி சக்தியும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்தநிலையில் முப்பிடாதி சக்திக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தட்சிணாமூர்த்தி நேற்று கடையம் வந்து, முப்பிடாதி சக்தியை கண்டித்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி கத்தியால் முப்பிடாதி சக்தியை குத்தினார்.

    இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதி லட்சுமி விசாரணை நடத்தி தட்சிணாமூர்த்தியை கைது செய்தார். மேலும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் தட்சிணாமூர்த்தி கோர்ட்டில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள். இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், கைதான போலீஸ்காரர் தட்சிணா மூர்த்தியை ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×