என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏற்கனவே மனைவி இருப்பவருடன் திருமணம் - குடும்பத்தினர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 11:45 AM GMT (Updated: 9 Dec 2019 11:45 AM GMT)
புதுவையில் குடும்பத்தினர் பேசாததால் மனவருத்தத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ஜீவா நகர் செயின்ட் பால்பேட்டை சேர்ந்தவர் அங்காளன் (வயது 65) கொத்தனார். இவருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். முதல் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் கடைசி மகள் சசிரேகா (25) பி.ஏ படித்து உள்ளார்.
இவர் 3 ஆண்டுகளாக நேரு வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் படிக்க செல்வதாக கூறி சென்னை சென்று விட்டார். பின்னர் தனது தந்தையிடம் போன் மூலம் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் சசிரேகா துணிக்கடையில் வேலை பார்த்த போது உடன் வேலை செய்த முத்தியால்பேட்டையை சோலை நகரை சேர்ந்த இஸ்ஷாக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து தனது பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
இவர்களுக்கு 4 மாத குழந்தை உள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே இஸ்ஷாக்கிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தற்போது இஸ்ஷாக் மற்றும் ஆயிஷா இருவரும் கோவிந்த சாலையில் வசித்து வருகின்றனர்.
இதனையறிந்த அங்காளன் ஆயிஷாவிடம் ஏன் இப்படி செய்தாய் எங்களை அவமானபடுத்தி விட்டாயே என கூறிதிட்டினார். மேலும் அங்காளன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிஷாவிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஆயிஷா நேற்று இரவு சமையலறையில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்த ஆயிஷாவின் தந்தை அங்காளன் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை லாஸ்பேட்டை ஜீவா நகர் செயின்ட் பால்பேட்டை சேர்ந்தவர் அங்காளன் (வயது 65) கொத்தனார். இவருக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். முதல் மகளுக்கும் மகனுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் கடைசி மகள் சசிரேகா (25) பி.ஏ படித்து உள்ளார்.
இவர் 3 ஆண்டுகளாக நேரு வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்தார். பின்னர் கடந்த மார்ச் மாதம் படிக்க செல்வதாக கூறி சென்னை சென்று விட்டார். பின்னர் தனது தந்தையிடம் போன் மூலம் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் சசிரேகா துணிக்கடையில் வேலை பார்த்த போது உடன் வேலை செய்த முத்தியால்பேட்டையை சோலை நகரை சேர்ந்த இஸ்ஷாக் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து தனது பெயரை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
இவர்களுக்கு 4 மாத குழந்தை உள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே இஸ்ஷாக்கிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தற்போது இஸ்ஷாக் மற்றும் ஆயிஷா இருவரும் கோவிந்த சாலையில் வசித்து வருகின்றனர்.
இதனையறிந்த அங்காளன் ஆயிஷாவிடம் ஏன் இப்படி செய்தாய் எங்களை அவமானபடுத்தி விட்டாயே என கூறிதிட்டினார். மேலும் அங்காளன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிஷாவிடம் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஆயிஷா நேற்று இரவு சமையலறையில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்த ஆயிஷாவின் தந்தை அங்காளன் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X