என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 10:48 AM GMT (Updated: 9 Dec 2019 10:48 AM GMT)
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தீராத வயிற்று வலி காரணமாக பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிசாமி(வயது 50). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாரிசாமிக்கு கை, கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிறு வலியும் அதிகமாக இருந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மேற்கொண்டார். ஆனால் குணமாகவில்லை.
இந்நிலையில் வயிறு வலி அதிகமானதால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விவசாயத்திற்காக வைத்திருந்த களைக்கொள்ளி மருந்தை குடித்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் மாரிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிசாமி(வயது 50). இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக மாரிசாமிக்கு கை, கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிறு வலியும் அதிகமாக இருந்துள்ளது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மேற்கொண்டார். ஆனால் குணமாகவில்லை.
இந்நிலையில் வயிறு வலி அதிகமானதால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் விவசாயத்திற்காக வைத்திருந்த களைக்கொள்ளி மருந்தை குடித்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் மாரிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X