search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ரூ.12 கோடி வாடகை பாக்கி - திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சுற்றுப்பகுதியில் ரூ.12 கோடி வாடகை பாக்கி செலுத்தாத கடை மற்றும் வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக சுமார் 245 வீடுகள், 16 கடைகள் உள்ளன. இதில் அனைவரும் அடிமனை வாடகைதாரர்களாக உள்ளனர்.

    அவர்கள் இந்து அறநிலைதுறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மாதந்தோறும் செலுத்தவேண்டும்.

    இந்த நிலையில் வடிவுடையம்மன் கோவில் நிலத்தில் வீடு மற்றும் கடை வைத்திருப்பவர்கள் பலர் பல ஆண்டுகளாக வாடகைகட்டவில்லை.

    இவர்கள் உடனடியாக நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என்று அறநிலைத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

    ஆனாலும், தொடர்ந்து அடிமனை வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து வாடகை செலுத்தாத வீடு மற்றும் கடைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி அறநிலையத்துறை சென்னை உதவி ஆணையர் கவிநிதி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் ஊழியர்கள் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

    அவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சுற்றுப்பகுதியில் உள்ள அடிமனை வாடகை செலுத்தாத கடை மற்றும் வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அற நிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘அடிமனை வாடகை தாரர்கள் சுமார் ரூ. 12 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து வாடகை வசூல் செய்ய தற்போது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வாடகை செலுத்த முன் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது’ என்றார்.

    Next Story
    ×