search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏடிஎம் உடைக்கப்பட்டுள்ள காட்சி.
    X
    ஏடிஎம் உடைக்கப்பட்டுள்ள காட்சி.

    போரூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    போரூரில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    போரூர், கிண்டி டிரங்க் சாலையில் கர்நாடக வங்கி உள்ளது. அதன் எதிரில் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று நள்ளிரவு 12.40 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார்.

    அப்போது பணம் எடுக்க மற்றொரு வாலிபர் அங்கு வந்தார். உடனே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர் அங்கிருந்து நைசாக தப்பி சென்றுவிட்டான்.

    இதற்கிடையே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது பற்றி ஐதராபாத்தில் உள்ள வங்கி தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கை மணி ஓலித்தது. உடனடியாக அங்கிருந்து போரூர் போலீசாருக்கு வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் சிறிய “லிவர்” மற்றும் “ஸ்குரு டிரைவர்” உடன் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தப்பி சென்றது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×