என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி லாட்ஜில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 5:42 AM GMT (Updated: 9 Dec 2019 5:42 AM GMT)
தென்காசி லாட்ஜில் கடன் தொல்லை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள செந்தில் விளையை சேர்ந்தவர் ராபின் கிறிஸ்டோபர் (வயது42). இவருக்கு ஏராளமாக கடன் தொல்லை இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் அவர் தென்காசி வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவரை காணாத அவரது மனைவி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் தென்காசி லாட்ஜில், ராபின் கிறிஸ்டோபர் தங்கி இருந்த அறை கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது படுக்கையில் ராபின் கிறிஸ்டோபர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள செந்தில் விளையை சேர்ந்தவர் ராபின் கிறிஸ்டோபர் (வயது42). இவருக்கு ஏராளமாக கடன் தொல்லை இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த வாரம் வீட்டுக்கு தெரியாமல் அவர் தென்காசி வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். அவரை காணாத அவரது மனைவி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில் தென்காசி லாட்ஜில், ராபின் கிறிஸ்டோபர் தங்கி இருந்த அறை கதவு நேற்று நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர்.
அப்போது படுக்கையில் ராபின் கிறிஸ்டோபர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X