என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேளச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பிரியாணி கடை மாஸ்டர் பலி
வேளச்சேரி:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அஜி ஜில்கான் (35). இவர் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அஜி ஜில் கான் தனது சைக்கிளில் வேளச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிக்கரணை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கைவேலி அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜி ஜில் கான் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வேளச்சேரி விநாயகபுரம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்த ஹேமந்த்குமாரும் படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம் பக்கத்தனர் மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹேமந்த்குமார் சித்தாலபாக்கத்தில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்