என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகள் திருட்டு
Byமாலை மலர்7 Dec 2019 5:21 PM GMT (Updated: 7 Dec 2019 5:21 PM GMT)
ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 50). அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மார்க்ரெட் தெரசா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2 பக்க கதவுகளை பூட்டி விட்டு தூங்கினர். பின்னர் நேற்று காலை எழுந்த தம்பதி வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டினுள் இருந்த பீரோவை பார்த்தனர். அப்போது துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மார்க்ரெட் தெரசா தனது கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பார்த்தார். அப்போது அந்த சங்கிலியையும் மர்மநபர்கள் திருடி கொண்டு சென்றது தெரியவந்தது.
பின்னர் திருட்டு சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கோபால் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 50). அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மார்க்ரெட் தெரசா (45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் 2 பக்க கதவுகளை பூட்டி விட்டு தூங்கினர். பின்னர் நேற்று காலை எழுந்த தம்பதி வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் வீட்டினுள் இருந்த பீரோவை பார்த்தனர். அப்போது துணிகள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் மார்க்ரெட் தெரசா தனது கழுத்தில் கிடந்த 5½ பவுன் சங்கிலியை பார்த்தார். அப்போது அந்த சங்கிலியையும் மர்மநபர்கள் திருடி கொண்டு சென்றது தெரியவந்தது.
பின்னர் திருட்டு சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவம் குறித்து கோபால் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 6½ பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X