search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண் பிணம்
    X
    ஆண் பிணம்

    போடி அருகே ஓடையில் லாரி டிரைவர் பிணம்

    போடி அருகே ஓடையில் இறந்துகிடந்த லாரி டிரைவர் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகில் உள்ள வங்காஞ்சி ஓடை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் இறந்துகிடப்பதாக போடி டவுன்போலீசாருக்கு வி.ஏ.ஓ ராஜாமணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் போடிகீழத்தெருவை சேர்ந்த முருகேசன்(54) என்பதும், லாரி டிரைவராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசன் எவ்வாறு ஓடையில் விழுந்து இறந்தார் என தெரியவில்லை. போதையில் விழுந்தாரா அல்லது யாரேனும் தாக்கி உள்ளே விழுந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×