search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பாப்பாநாடு அருகே விபத்தில் முதியவர் பலி

    பாப்பாநாடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே கண்ணுக்குடி மேற்கு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது55).  இவர் தற்போது தஞ்சை ஞானம் நகரில் வசித்து வந்தார். நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் பாப்பாநாடு காவல் சரகம் திருமங்கலக் கோட்டை மேலையூருக்கு சென்றார்.

    அப்போது அப்பகுதியில் வந்த ஒரு அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதில் கலைசெல்வன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து கலைசெல்வன் மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×