என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் - அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்6 Dec 2019 3:43 PM GMT (Updated: 6 Dec 2019 3:43 PM GMT)
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் உள்பட பலர் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். தேர்தலை பொறுத்தவரை சூப்பர் ஃபாஸ்ட் கட்சி என்றால், அது அதிமுகதான்.
எப்பாடுபட்டாவது உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. உள்ளாட்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X