search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தலைமை அலுவலகம்
    X
    அதிமுக தலைமை அலுவலகம்

    சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

    ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கியது.
    சென்னை:

    தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று தேர்தல் அறிவிப்பாணையை வாபஸ் பெற்றது.
    விரைவில் உள்ளாட்சி தேர்தல் பற்றிய புது அறிவிப்பை வெளியிட உள்ளது.

    இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×