search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    அன்னூர் அருகே விபத்து- மகனுடன் சென்ற பெண் பலி

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் மகனுடன் சென்ற பண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மரக்கடையை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 34). டெய்லர். சம்பவத்தன்று இவர் தனது மகன் சுதர்சன் (19) என்பவருடன் மங்கலத்தில் உள்ள தாயை பார்ப்பதற்கு சென்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிள் சோமனூர்-அன்னூர் ரோட்டில் வந்த போது ரோட்டின் நடுவே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

    இந்த விபத்தில் மகேஸ்வரி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மகேஸ்வரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×