என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொள்ளையர்கள் பையை பறித்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் பலி
வேளச்சேரி:
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்தவர் முருகலட்சுமி (49). கேட்ரிங் தொழில் செய்துவந்தார். கடந்த 22-ந் தேதி அவர், மகன் சண்முகசுந்தரத்துடன் மோட்டார் சைக்கிளில் வேளச்சேரி செல்வதற்காக குரோம்பேட்டை துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முருகலட்சுமி கையில் இருந்த பணப்பையை பிடித்து இழுத்தனர். இதில் அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனே மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த முருகலட்சுமியை மீட்டு அண்ணா நகரில் தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகலட்சுமி நேற்று இறந்தார்.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கொலைவழக்காக பதிவு செய்து வழிப்பறி நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்