search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி கோவில்
    X
    பழனி கோவில்

    பாபர் மசூதி இடிப்பு தினம் - திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் வழிப்பாட்டு தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இன்று திண்டுக்கல் ரெயில் நிலையம், பஸ் நிலையம், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பழனி மலைக்கோவில் ராஜகோபுரம், தங்ககோபுரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோப்கார், இழுவை ரெயில், மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    தேனி மாவட்டத்திலும் பஸ் நிலையம் மற்றும் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போடி பஸ் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் பாதுகாக்கும் இடத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×