என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்று குறி சொன்னதால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்6 Dec 2019 10:03 AM GMT (Updated: 6 Dec 2019 10:03 AM GMT)
மரக்காணம் அருகே பெற்றோர் உயிருக்கு ஆபத்து என்று குறி சொன்னதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கனூர்:
மரக்காணம் அருகே சூலைமேட்டை அடுத்த தாங்கல் தோட்டக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது39). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை. திருமணத்துக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.
இதையடுத்து ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை திப்புராயப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரை சந்தித்து குறிகேட்டார். அப்போது உங்கள் வீட்டுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் திருமணம் கைகூடவில்லை என்று அந்த சாமியார் கூறினார். மேலும் பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக சாமியார் கூறினார். இதனைகேட்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
சாமியார் கூறியது முதல் மணிகண்டன் பித்து பிடித்தது போல் ஆனார். வேலைக்கு செல்லாமலும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமலும் இருந்து வந்தார். இதையடுத்து அவரது மனநிலை மாற பெற்றோர் திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில உள்ள சித்தி வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினர். இதனை ஏற்று மணிகண்டன் கடந்த சில நாட்களாக சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றுகாலை சித்தி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மரக்காணம் அருகே சூலைமேட்டை அடுத்த தாங்கல் தோட்டக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் மணிகண்டன் (வயது39). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு திருமணமாகவில்லை. திருமணத்துக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.
இதையடுத்து ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட மணிகண்டன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை திப்புராயப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரை சந்தித்து குறிகேட்டார். அப்போது உங்கள் வீட்டுக்கு நேரம் சரியில்லை. அதனால்தான் திருமணம் கைகூடவில்லை என்று அந்த சாமியார் கூறினார். மேலும் பெற்றோர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக சாமியார் கூறினார். இதனைகேட்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார்.
சாமியார் கூறியது முதல் மணிகண்டன் பித்து பிடித்தது போல் ஆனார். வேலைக்கு செல்லாமலும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமலும் இருந்து வந்தார். இதையடுத்து அவரது மனநிலை மாற பெற்றோர் திருக்கனூர் அருகே லிங்காரெட்டிப்பாளையத்தில உள்ள சித்தி வீட்டில் சில நாட்கள் தங்கி இருக்கும்படி அறிவுறுத்தினர். இதனை ஏற்று மணிகண்டன் கடந்த சில நாட்களாக சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்றுகாலை சித்தி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சுத்துக்கேணி பகுதியில் ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குபோட்ட நிலையில் மணிகண்டன் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X