என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து பெண் பலி
Byமாலை மலர்6 Dec 2019 9:32 AM GMT (Updated: 7 Dec 2019 5:14 AM GMT)
நெல்லை அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியானார். டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேரன்மகாதேவி:
பாபநாசத்தில் இருந்து நெல்லையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தருவையை சேர்ந்த அருண்குமார் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த பேருந்து சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு அருகில் வரும்போது நடுரோட்டில் ஒரு மாடு திடீரென குறுக்காக வந்தது. இதனால் பஸ் டிரைவர் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை ரோட்டின் வலது புறமாக திருப்பி திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் அந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த டிரைவர் உள்பட 8-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடன் பயணித்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லிடைக்குறிச்சி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா (48) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசத்தில் இருந்து நெல்லையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று வந்து கொண்டு இருந்தது. அந்த பேருந்தை தருவையை சேர்ந்த அருண்குமார் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த பேருந்து சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு அருகில் வரும்போது நடுரோட்டில் ஒரு மாடு திடீரென குறுக்காக வந்தது. இதனால் பஸ் டிரைவர் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை ரோட்டின் வலது புறமாக திருப்பி திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் அந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த டிரைவர் உள்பட 8-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடன் பயணித்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லிடைக்குறிச்சி காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா (48) என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X