என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
கோவை:
கோவையை அடுத்த பேரூர் அருகே ஆறுமுக கவுண்டனூர் சிற்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவரது மனைவி மஞ்சுளா(56). ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை வடிவமைப்பதற்காக திருச்சிக்கு சென்றார். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அவரும் வெளியில் சென்று விட்டார்.
அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த 12 பவுன் நகையை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் அம்மன் நகரை சேர்ந்த மனோஜ்(32) என்பதும், பட்டதாரியான இவர் தான் ராஜேந்திரன் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்