search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கோவை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

    கோவை அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையை அடுத்த பேரூர் அருகே ஆறுமுக கவுண்டனூர் சிற்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). இவரது மனைவி மஞ்சுளா(56). ராஜேந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை வடிவமைப்பதற்காக திருச்சிக்கு சென்றார். அவரது மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அவரும் வெளியில் சென்று விட்டார்.

    அப்போது கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் அங்கிருந்த 12 பவுன் நகையை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் அம்மன் நகரை சேர்ந்த மனோஜ்(32) என்பதும், பட்டதாரியான இவர் தான் ராஜேந்திரன் வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×